தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
தேர்வு விடுமுறை நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக, பள்ளிகள் 2 வருடங்கள் சரியாக திறக்கப்படாமல் ஆன்லைன் வாயிலாக தான் வகுப்புகள், தேர்வுகள் நடைபெற்றது. இருப்பினும் சுகாதார துறையின் தீவிர நடவடிக்கையால் நோய் தாக்கம் குறைந்து வந்தது. இதன் அடிப்படையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான (2022-23) நேரடி வகுப்புகள் கடந்த ஜூன் 13 ம் தேதி முதல் தொடங்கியது. மேலும் தமிழக அரசு 2022-23 கல்வி ஆண்டுக்காக வெளியிட்ட கல்வி நாட்காட்டியின் அடிப்படையில், கடந்த மாதம் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் முதல் பருவத் தேர்வுகள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதையடுத்து 1 முதல் 12ம் வகுப்புக்கான காலாண்டு தேர்வுகள், இந்த மாதம் இறுதி வரை நடைபெறுகிறது. மேலும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2ஆம் பருவத்துக்கான ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி வரும் அக்டோபர் 6 முதல் 8ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதனால் மாணவர்களுக்கு அளிக்கப்படும் காலாண்டு விடுமுறையில் மாற்றங்கள் வர உள்ளதாக பல தகவல்கள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு சர்ப்ரைஸ் – மத்திய அரசு மாஸ்டர் பிளான்! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே!!
இருப்பினும் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் வரும் அக்டோபர் 6 முதல் கண்டிப்பாக பள்ளிகளுக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை, அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.