மத்திய அரசின் பசுமை விரைவு சாலை திட்டத்தின் மூலம், போக்குவரத்து சேவையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
அரசின் திட்டம்:
நாடு முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் மார்க்கங்களில் ஒன்று சாலை போக்குவரத்து. பெருநகரங்களுக்கு செல்ல நினைக்கும் மக்கள், விரைவாகவும், குறிப்பிட்ட நேரத்திற்குள்ளும் தங்கள் இலக்கை அடைவதற்காக பல தேசிய நெடுஞ்சாலைகள் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பசுமை விரைவு சாலை என்ற திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தமிழகத்தில் “இவர்களுக்கு” அரசின் மாதாந்திர உதவித்தொகை – உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!
இந்த திட்டம் குறித்து பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள், பசுமை விரைவு சாலைகள் அமைக்கப்படும் என்றும், இந்த அதிரடி திட்டத்தால் சென்னை டூ பெங்களூர் செல்ல இனி 2 மணி நேரமே அதிகம் என தெரிவித்தார். இதனால் பயணிகளுக்கு ஏற்படும் நேர இழப்பு முற்றிலும் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த அதிரடி திட்டத்திற்கு, வாகன ஓட்டிகள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.