தமிழகத்தில் கொரோனா காரணமாக பொதுமக்கள் இதுவரை சந்திக்காத பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தனர். இதனால் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த மக்கள் சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் ஆபரண தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் பெண் குழந்தைகளின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யலாம்.
நடப்பு மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இருப்பினும் தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக தங்கத்தின் விலை குறைந்து வருவதால், பொதுமக்கள் பெருமளவில் தங்க நகைகளை வாங்கி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில்ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.54 குறைந்து ரூ.4,626 க்கும், சவரனுக்கு ரூ.432 குறைந்து ரூ.37,008க்கும் விற்பனையானது . அதேபோல், 24 கேரட் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.40,224 க்கு விற்பனையானது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதை தொடர்ந்து வெள்ளி ஒரு கிராம் ரூ.61.60க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.61,600க்கும் விற்பனையானது. தங்கத்தின் விலை சரிவை சந்தித்து உள்ளதால், நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.