வெண்ணையிலேயே செஞ்ச சிலை போல ஜொலித்துக் கொண்டிருக்கும் நிதி அகர்வால் தற்போது புன்னகையுடன் இருக்கும்படியான அழகிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
நிதி அகர்வால்
முன்னா மைக்கேல் என்கிற ஹிந்தி திரைப்படத்தின் மூலமாக சினிமா துறையில் அறிமுகமானவர் தான் நிதி அகர்வால். இதற்குப் பிறகு தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் முதன்முறையாக பூமி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன் என்னும் திரைப்படத்திலும் நடித்தார்.
இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார். திரைப்படங்களைக் காட்டிலும் தற்போது மாடலிங்கில் அதிகமான கவனம் செலுத்தி வருவதால் திரைப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.ஈஸ்வரன் திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்ததன் காரணமாக சிம்புவும் நிதி அகர்வாலும் காதலிக்கிறார்கள் என்று வதந்திகள் பரவி வந்தன.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும், நிதி அகர்வாலின் அடுத்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், தனது கட்டுடலை நாளுக்கு நாள் மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார். தற்போது வெள்ளை நிற உடையில் புன்னகையுடன் இருக்கும்படியான ஒரு போட்டோஷூட் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.