ஆஸ்திரேலியாவில் நடைபெறும் T20 உலக கோப்பைக்கான இந்திய அணி வெளியிட்டுள்ள நிலையில், அதில் தமிழக வீரர்கள் இடம் பிடித்திருப்பது இந்திய ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
களமிறங்கும் இந்திய அணி!!
2022-ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை BCCI தற்போது அறிவித்துள்ளது. இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டனாக கே எல் ராகுலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தொடரில் மொத்தமாக 45 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த போட்டிகள் அனைத்தும் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன. அதன்படி நவம்பர் 9, 10 ஆம் தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இதை தொடர்ந்து இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. பிரதான சுற்றின் முதல் ஆட்டம் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து ஆகிய அணிகளும், அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதவுள்ளன.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே எல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர்.அஷ்வின், ஒய் சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, பி.குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். காத்திருப்பு வீரர்கள்: முகமது ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.