தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக இருக்கும் பிரியா பவானி சங்கர் பாரினில் அருவியின் அருகில் தன் லேட்டஸ்ட் போட்டோஷூட்டை பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
பிரியா பவானி சங்கர்:
கோலிவுட்டில் முக்கிய நாயகிகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்றவர். குறுகிய காலத்திலேயே இவரின் சினிமா பயணம் வெற்றியை நோக்கி பயணித்தது. இவர் நடித்த மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம். ஒ மணப்பெண்ணே ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது தெலுங்கு சினிமாவிலும் முக்கிய படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். நாக சைதன்யாவுடன் ஒரு படத்தில் இவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இவர் தன் காதலனுடன் சேர்ந்து வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கிருந்து தன் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார் பிரியா பவானி சங்கர். தற்போது அருவி பக்கத்தில் அழகிய போட்டோஷூட் ஒன்றை செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.