தமிழக பேருந்துகளில் இனி இதெல்லாம் செய்ய கூடாது., மீறினால் இறங்கி விடுங்க – மாநில அரசு உத்தரவு!!

0

தமிழக பேருந்துகளில்  பெண் பயணிகளை முறைத்து பார்த்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் ஆண்களை, பேருந்தில் இருந்து இறக்கி விடும்  முக்கிய சட்ட திருத்தத்தை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அரசு அறிவிப்பு:

தமிழகத்தில் நகரப் பேருந்துகளில், மகளிருக்கு இலவச பயணம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பை அடுத்து, பெண் பயணிகளிடம் நடத்துனர்கள் கண்ணியமாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில், மோட்டார் வாகன சட்டத்தில்  அதிரடி திருத்தம் ஒன்றை  செய்து மாநில அரசு செய்துள்ளது. அதாவது, பேருந்துகளில் பயணம் செய்யும் பெண் பயணிகளை சக ஆண் பயணிகள் முறைப்பது, திட்டுவது, விசில் அடித்து ஆபாச சைகை காட்டுவது, அவர்களிடம் வம்பிழுப்பது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அவர்களை நடத்துனர் பேருந்தில் இருந்து இறக்கி விடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை மீறும் ஆண்களை, காவல் நிலையத்தில் புகார் செய்யலாம் என்றும்  அரசு உத்தரவிட்டுள்ளது.  இந்த அதிரடி, சட்டத் திருத்தத்திற்கு தமிழகப் பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here