தனியார் டாக்சி சேவையை போன்று கேரள அரசு டாக்சி சவாரி என்ற பெயரில் அரசு நடத்தும் டாக்சி சேவையை மக்களுக்காக அறிமுகப்படுத்தி உள்ளது.
ஹீரோவாக களமிறங்கும் குக் வித் கோமாளி பிரபலம் – டைட்டில் போஸ்டரே இவ்ளோ கொடூரமா இருக்கே!!
கேரளா சவாரி செயலி:
நாடு முழுவதும் இயங்கி வரும் தனியார் டாக்சி சேவைகளான ஓலா, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆன்லைன் டாக்சி சேவைகளை வழங்கி வருகின்றன. இது போன்ற ஆன்லைன் சவாரிகள் எந்த ஒரு நாட்டிலும் அரசாங்கம் ஏற்று நடத்தியது இல்லை. இதை தற்போது கேரளா அரசாங்கம் முறியடித்துள்ளது. அதாவது தனியார் நிறுவனத்தை போன்று நாட்டிலேயே முதல் முறையாக கேரள அரசு சார்பில் இ – டாக்சி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக கேரளா சவாரி என்ற பெயரில் ஆன்லைன் டாக்சி சேவையை தொடங்கியது கேரள அரசு.
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
மேலும் கேரளா சவாரி சேவையில் பயணிக்கும் பயணியாளர்களுக்கு மலிவான விலையிலும், முழுமையான பாதுகாப்பு மற்றும் தொந்தரவு இல்லாத பயணத்திற்கு உறுதி அளிக்கும் விதமாக இந்த டாக்சி சேவை தொடங்கப்பட்டுள்ளது என்று கேரள அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த சேவையின் கீழ் எட்டு சதவீதம் மட்டுமே ஓட்டுநர்களிடம் சேவைக் கட்டணமாகப் பெறப்படும் என அம்மாநில அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்