நடிகர் விஜய் புலி படத்தில் நடித்த போது, வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை அபராதம் விதித்திருந்த நிலையில், இது குறித்த முக்கிய தீர்ப்பு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு:
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். தற்போது, வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில், விஜய் நடிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான புலி திரைப்படத்தில் நடித்த போது விஜய் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக, வருமானவரித்துறை இவருக்கு 1.5 கோடி அபராதம் விதித்திருந்தது.
தற்போது, வருமான வரித்துறை விதித்த இந்த அபராதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, நடிகர் விஜய் சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சிக்கியிருந்த நிலையில் தற்போது இந்த வழக்கு குறித்த தீர்ப்பு மீண்டும் கோலிவுட்டில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.