திருவள்ளூர் மாவட்டத்தில் திரு இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் பிளஸ் டூ மாணவி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிளஸ் 2 மாணவி தற்கொலை:
அண்மையில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் நிகழ்ந்த்தது. இந்த சூழ்நிலை மாறாமல் இருக்கும் நிலையில் தற்போது திருவள்ளுவர் மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளியான திரு இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் சரளா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருத்தணி தக்களூரை சேர்ந்த சரளா பள்ளி விடுதியில் தங்கி படித்துள்ளார். வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதற்கு கிளம்பி எப்போது இருப்பது போல் மாணவிகளுடன் சிரித்து பேசி விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு விடுதியில் தங்கி படிப்பவர்கள் காலை உணவிற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் அனைவரும் உணவருந்த சென்ற பின் விடுதியில் தனிமையில் இருந்த மாணவி சரளா திடீரென தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். உணவுக்கு சென்ற பள்ளி மாணவிகள் அறைக்கு திரும்பிய போது மாணவி சரளாவின் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். சம்பவம் அறிந்து வந்த போலீஸார் மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்