தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக உள்மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு
மே-4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்று முடிவுக்கு வருகிறது. சென்னையில் அதிகபட்ச வெயில் நேற்று 39 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. சென்னையில் செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸாக இருக்கும்.தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், கோவை, நீலகிரி, சேலம், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில், அதிகபட்சமாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும். முற்பகல் 11:30 மணி முதல் 03: 30 மணி வரை திறந்தவெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசையும் ஒட்டி இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |