பாக்கியலட்சுமி தொடரில் தற்போது அனைத்து உண்மைகளும் மொத்த குடும்பத்திற்கும் தெரிய வர மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் செய்வதறியாது நிற்கிறது. அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு கொரியரில் விவாகரத்து நோட்டீஸ் வருகிறது. அதனை படித்து எழில் ஷாக் ஆகிறார். மேலும் பாக்கியா அதை வாங்கி ஈஸ்வரிக்கும் காட்டுகிறார்.
6 மாதம் ஆகிவிட்டதால் இருவரும் மனப்பூர்வமாக பிரிவதாக அந்த நோட்டீஸில் உள்ளதை பார்த்து ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். உனக்கு கல்யாண வயசுல பையன் இருக்கான். இனியாவுக்கு நல்லது கெட்டது பார்க்கணும் என ஆத்திரம் அடைந்து கோபியை அறைகிறார். எழிலும் என் அம்மாவை ஏமாற்றி எப்படி நீங்கள் சந்தோசமாக இருப்பிர்கள் என எழிலை அடிக்க பாய்கிறார். அதன்பின்னர் கோபி பாக்யாவிடம் மன்னிப்பு கேட்க, பாக்கியா எதையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
இந்த காட்சிகள் இன்றைய எபிசோடில் காட்டப்பட உள்ளன. அதை தொடர்ந்து பாக்கியா வீட்டை விட்டு வெளியேறி ராதிகாவை சந்திக்க செல்கிறார். எதுவும் அறியாத ராதிகா பழையபடி பாக்கியாவிடம் பொய் சொல்ல எனக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது என பாக்கியா சொல்கிறார். அதை கேட்டு ராதிகா அதிர்ச்சி அடைகிறார். அதனால் இனி வரும் எபிசோடுகளில் பாக்கியாலட்சுமி சீரியலில் பரபரப்பான காட்சிகள் காட்டப்பட உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்