தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாநிலம் முழுவதும் செயல்படுத்த பெற்றோர் கோரிக்கை!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மாநிலம் முழுவதும் செயல்படுத்த பெற்றோர் கோரிக்கை!!

தமிழகத்தில் சில பள்ளி மாணவர்கள், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதால் அவர்களை மீட்க நெல்லையில் முதல் முறையாக  போதை தடுப்பு குழு அமைக்க மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 ஆட்சியர் அறிவிப்பு :

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அண்மையில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்ச்சி முடிவுகள் வெளியானது. தொடர்ந்து நேற்று, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்களுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது.

வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, தமிழகத்தில் ஒரு சில மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி, தவறான வழியில் செல்வதாக குற்றச்சாட்டு பதிவானது.
அதை தடுப்பதற்காக, தமிழகத்தில் முதல் முறையாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், போதை தடுப்பு குழு அமைக்கப்படும் என  மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனை வரவேற்றுள்ள, பெற்றோர் இந்த  அமைப்பை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என  அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here