தமிழகத்தில், கடந்த சில தினங்களாக வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மீண்டும் கட்டுப்பாடுகள் :
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக, கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. சென்னை ஐஐடி வளாகத்தில், வெளிமாநிலத்தில் இருந்து வந்த பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், அங்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டது. சென்னை மட்டுமல்லாது திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வைரஸ் பரவல் புது உச்சம் தொட்டு வருகிறது. அதுபோல மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 692 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
அதாவது, மாவட்டத்தில் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் முக கவசம் அணிதல், சமூக இடை கடை பிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படுவதாக தெரிவித்தார். அதுபோல திருமண மண்டபங்களில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், இறப்பு நிகழ்வில் 50 நபர்களுக்கு மேல் கூட கூடாது என்றும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்