தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் மட்டுமே சலூன் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில் சென்னையைத் தவிர அனைத்து நகர்ப்புறங்களிலும் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
சலூன் & பார்லர்:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இது குறித்து வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஏற்கனவே ஊரகப் பகுதிகளில் மட்டும் மே 19ம் தேதி முதல் சலூன் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. தற்போது முடி திருத்தும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் 24.5.2020 அன்று முதல் (தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை) இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
- தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் இயங்க அனுமதி கிடையாது.
- தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து பணிக்கு வருகின்ற முடிதிருத்தும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாது.
- பணியாளர்களுக்கோ, வாடிக்கையாளர்களுக்கோ சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் நிலையங்களுக்குள்ளே அனுமதிக்கக்கூடாது.
- முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்களில் ஒரு நாளைக்கு 5 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
- குளிர்சாதன வசதி இருப்பின் அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |