பட்டியலின மக்களை அவமதிக்கும் படி பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திமுக.,வின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
போலீசார் வழக்குப்பதிவு:
திமுக இளைஞரணி சார்பில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி அன்பகத்தில் நடைபெற்ற நடைபெற்ற கட்சிக்கூட்டத்தில் திமுக.,வின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, நீதிபதிகள் மற்றும் பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண சுந்தரம் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்த காரணத்தால் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் இரண்டு பிரிவுகளின் கீழ் ஆர்எஸ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நேற்று திமுக.,வில் பதவி பறிப்பு – இன்று பாஜக.,வில் இணைந்தார் விபி துரைசாமி..!
இன்று அதிகாலை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார், ஆர்எஸ் பாரதியை சென்னை ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் திமுக.,வினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த கைது நடவடிக்கைக்கு பிஜேபி எச் ராஜா வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |