பாகிஸ்தானில் கோர விமான விபத்து – 99 பயணிகள் உட்பட 107 பேர் பலி..!

0

பாகிஸ்தானில் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்று வீடுகளில் மோதி விபத்தில் அதில் பயணித்த 99 பயணிகள் உட்பட 107 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விமான விபத்து:

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் ஏர்பஸ் ஏ 320 பயணிகள் விமானம் லாகூரில் இருந்து கிளம்பி கராச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும் பொழுது அதன் அருகே இருந்த குடியிருப்பு பகுதிகளில் மோதி விழுந்து நொறுங்கியது. இதில் விமானம் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதில் பயணித்த 99 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் என 107 பேரும் உயிரிழந்து விட்டதாக கராச்சி மேயர் தெரிவித்து உள்ளார்.

விபத்து நடைபெறுவதற்கு முன் விமானம் மூன்று முறை ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சி செய்துள்ளது. இதனால் விமான என்ஜின்கள் சக்தியை இழந்து விட்டதாக விமானி கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார். நான்காவது முறை விமானம் தரையிறங்க முயன்ற பொழுது விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

விபத்து நடைபெறுவதற்கு சில நொடிகளுக்கு முன்னரே தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டதால் பைலட் ‘மேடே’ பலமுறை அழுததாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. மீட்புப் பணியில் உள்ளூர் வாசிகள், ராணுவ வீரர்களுடன் மீட்புக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். வீடுகளுக்கு மேல் விமானம் விழுந்து நொறுங்கிய காரணத்தால் வீட்டில் இருந்தவர்களும் விபத்தில் சிக்கி உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here