நாட்டில் ரயில் நிலையங்களுக்கான, பிளாட்பார்ம் டிக்கெட் விலையை 5 மடங்கு வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில்வே அறிவிப்பு:
கொரோனா பரவலுக்கு பிறகு, கடந்த சில மாதங்களுக்கு முன் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது, ரயில் பயணிகளுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை, இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. அதாவது ரயில் நிலையங்களில், பிளாட்பார்ம் டிக்கெட் விலையை 10 ரூபாயில் இருந்து, 50 ரூபாயாக, அதாவது 5 மடங்கு வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு மே 9ம் முதல் 23 ம் தேதி வரை வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டண விதிமுறைகள் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், தாதர், லோகமான்ய திலக் டெர்மினஸ், தானே உள்ளிட்ட பல ரயில் நிலையங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது. ரயில் நிலையங்களில் தேவையற்ற நபர்களின் நடமாட்டத்தை குறைக்க, இந்த முடிவை தாங்கள் எடுத்துள்ளதாக இந்திய ரயில்வே விளக்கமளித்துள்ளது. இதனால், ரயில்வே பயணிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்