ஓமைக்ரான் வைரஸின் மாறுபாடு அடைந்த, XE வகை வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சில பள்ளிகளுக்கு 3 நாள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
3 நாள் விடுமுறை:
இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு, கடந்த சில தினங்களாக குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஓமைக்ரான் வைரஸின் மாறுபாடு அடைந்த XE வகை வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பரவ தொடங்கி, பல நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு குஜராத்தை சேர்ந்த ஒரு நபருக்கு அண்மையில் உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தின் காஜியாபாத் பகுதியிலுள்ள 3 ஆசிரியர்கள் உள்ளிட்ட 16 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. அதேபோல், காசியாபாத்தில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மூன்று பள்ளிகள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது. ஆனால் இவர்களுக்கு, XE வகை பாதிப்பு உள்ளதா? என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இதனால், அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்