தமிழகத்தில் தடுப்பூசி போடாதோர் உயிரிழக்கும் அபாயம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!!

0

தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத மக்கள், கொரோனா மூன்றாம் அறையில் மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எச்சரிக்கை:

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று மிகவும் அதிகரித்து வருகிறது. இன்று சென்னை ஐஐடி வளாகத்தில், கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட பின், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநிலத்தின் தலைநகரான சென்னையில் 94.19% நபர்கள் முதல் தவணை தடுப்பூசி போட்டு உள்ளதாகவும், 74.11% நபர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இதுவரை 21 மாநகராட்சியில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் 100% வெற்றி பெற்றுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும், தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் மூன்றாம் அலையில் அதிகமாக உயிரிழந்து வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மக்கள், விரைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். தமிழகம் முழுவதும், 89% பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 65% பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here