தொழில் தொடங்குவதாக, கூறி வங்கியில் பல்லாயிரம் கோடி கடன் பெற்று, மோசடி புகாரில் சிக்கி வெளிநாடு தப்பிச் சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, தனது ட்விட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழ்த்து சொன்ன மல்லையா :
இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற தொழிலதிபர்களில் முக்கியமான நபராக விளங்கியவர் விஜய் மல்லையா. அவரது தலைமையின் கீழ், கிங் பிஷர் மதுபான ஆலை மற்றும் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வந்தது. தனது தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக, வங்கிகளில் இருந்து பல்லாயிரம் கோடி கடன் தொகை பெற்று, அதை செலுத்தாமல் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். இவரை, வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இது குறித்த பிரச்சனை அடிக்கடி விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், தொழிலதிபர் விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், நீங்க இருக்கும் போது, உங்க கம்பெனி KF பீர் பாதி குடிச்சா போதை ஏறும்… ஆனா, இப்போ முழு பீர் அடிச்சா கூட போதை ஏற மாட்டுது… உங்கள ரொம்ப மிஸ் பண்றோம் தலைவா என கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், தலைக்கு தில்ல பார்த்தியா? எனவும் கலாய்த்து வருகின்றனர்.
Happy Pongal to all
— Vijay Mallya (@TheVijayMallya) January 14, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்