மாநிலத்தில் இனி மால்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

0

வணிக வளாகங்களில்  வாகனங்களை நிறுத்துவதற்கு இனி வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றம் உத்தரவு:

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மால்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் சார்ஜ் வசூலிக்கப்படுகிறது. இதில், இரண்டு சக்கர வாகனங்களுக்கு ஒரு கட்டணமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என்று மணிக்கணக்கில், கணக்கு செய்து வாடிக்கையாளரிடம் இந்த கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இது குறித்து முக்கிய தீர்ப்பு ஒன்றை கேரள உயர் நீதிமன்றம் அளித்துள்ளது.

அதாவது, வணிக வளாகங்களில், வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், அரசு அமைத்துள்ள கட்டிட விதிகளின் படி, போதிய வாகன நிறுத்துமிடம் இருந்தால் மட்டுமே கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதனால் அங்குள்ள வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here