தமிழகத்தில் அமலாகும் முழு பொது முடக்கம் – பொருட்கள் வாங்க மார்க்கெட்டில் குவிந்த மக்கள்!!

0

தமிழகம் முழுவதும், ஜனவரி 16ம் தேதியான நாளை முழு ஊரடங்கு விதிக்கப்படுவதால், சென்னை காசிமேடு நகரில் உள்ள மீன் சந்தையில் ஏராளமான மக்கள் கூடியது  அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

நாளை பொது முடக்கம்:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜனவரி 16 ஆம் தேதியான நாளை, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த முழு ஊரடங்கில், அத்தியாவசிய மற்றும் மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற செயல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும், தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க இன்றே மார்கெட்டுக்கு படை எடுக்க தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில், சென்னை காசிமேட்டில் உள்ள மீன் மார்க்கெட்டில், மீன் வாங்க வந்த பொதுமக்கள் மொத்தமாக ஒரே இடத்தில் கூடியதால் அந்த இடம் திருவிழா பகுதியாக காட்சி அளித்தது. போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். ஒரே நேரத்தில் பல மக்கள் அந்தப் பகுதியில் ஒன்று சேர்ந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here