பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவை கண்ணம்மா கருக்கலைப்பு சட்டத்தில் போலீசிடம் மாட்டி விட்டதால் கண்ணமாவை ஒரேடியாக விவாகரத்து செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளார் பாரதி. கண்ணம்மாவிற்கு இதில் விருப்பம் இல்லை என்றாலும் 8 வருடங்கள் பாரதியை பிரிந்து இருப்பதால் நீதிபதி இவர்களுக்கு விவாகரத்து வழங்க அதிக வாய்ப்பு இருப்பதால் கலக்கத்தில் உள்ளார்.
இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகள் பற்றிய அப்டேட் வந்துள்ளது. அதில் கண்ணம்மா விருப்பம் இல்லாமல் கோர்ட்டிற்கு வருகிறார். மேலும் சௌந்தர்யா கண்ணம்மாவிற்கு உதவி செய்யமாட்டேன் என்று செய்த சத்தியத்தை பாரதி நியாபகப்படுத்துகிறார்.
சௌந்தர்யா எவ்வளவு கெஞ்சியும் தன் விவாகரத்து முடிவில் இருந்து பாரதி பின்வாங்கவில்லை. சூழ்நிலை அனைத்தும் பாரதிக்கு சாதமாக உள்ளதால் விவகாரத்து வழங்கப்படுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும். ஏற்கனவே ரோஷினி வேறு சீரியலை விட்டு சென்று விட்டதால் கண்டிப்பாக TRPயில் முன்னிலை வகிக்க கதைக்களத்தில் பல ட்விஸ்ட்டுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்