சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் பிரியா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அக்ஷயா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வந்துள்ளது.
நடிகைக்கு கொரோனா:
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கியமான தொடர் ரோஜா. அதில் நாயகன் நாயகியாக நடித்து வரும் இருவரின் ஜோடி பொருத்தம் அருமையாக அமைந்ததை அடுத்து, இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், பல கட்ட முக்கிய திருப்பங்கள் இந்த தொடரில் ஏற்பட்டு வருகிறது. ரோஜாவின் தாய் செண்பகம் பல வருடங்களுக்கு பிறகு தற்போது தான் தனது மகளுடன் வந்து இணைந்துள்ளார்.
இந்த தொடரில், பிரியா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அக்ஷயா தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அவரே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் விரைவில் குணமடைந்து சீரியலுக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் இவருக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்