நடந்து வரும் ஐ.பி.எல் தொடரில் சென்னைக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆர்.சி.பி அணியின் விராட் கோலி 66 ரன்களை கடந்தால், டி20யில் 10,000ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அத்தியாத்தில் கோலி :
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிய ஐ.பி.எல் தொடரில், கிரிக்கெட் நட்சத்திர வீரர்கள் தீவிரமாக விளையாடி வருகிறார்கள். இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக விளங்கி வரும் விராட் கோலிக்கு புதிய இலக்கு ஒன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை, அவர் வெற்றிகரமாக கடந்தால், இந்திய கிரிக்கெட் உலகத்தில் புதிய சகாப்தத்தை உருவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, இன்று நடைபெற உள்ள சென்னைக்கு எதிரான போட்டியில் கோலி 66 ரன்களை கடந்தால், டி20யில் 10,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை உருவாக்குவார். ஆகவே, இந்த சாதனையை கோலி படைக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்