கொரோனா பெருந்தொற்றால் இயக்கப்படாமல் இருந்த அரசு ஏசி பேருந்துகள் மீண்டும் அக்டோபர் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் இயக்கப்படும் ஏசி பஸ்கள்:
மாநிலம் முழுவதும் பரவியிருந்த கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை காரணமாக கடந்த மே 10ம் தேதி நிறுத்தப்பட்ட அரசு ஏசி பேருந்துகள் பல நாட்களாகியும் இயக்கப்படாமலே இருந்து வந்தது. இதையடுத்து, தமிழக அரசு அறிவித்துள்ள கூடுதல் தளர்வுகளில் வருகிற அக்டோபர் 1ம் தேதியில் இருந்து தற்போது வரை இயக்கப்படாமல் உள்ள ஏ.சி பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல், கொரோனாவின் நிலையான தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி முதல்கட்டமாக 702 ஏசி பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்