கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலையில் மாற்றமில்லை:
நாடு முழுவதும் சர்வதேச கச்சா எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மத்திய அரசால் கொள்முதல் செய்யப்பட்டு மாநிலங்கள் தோறும் தேவைக்கேற்ப பிரித்து வழங்கப்படுகிறது. இந்த எரிபொருட்களை வாட் வரியுடன் சில்லறையாக மாநில அரசு பொது மக்களிடம் விற்பனை செய்து வருகிறது. இந்த எரிபொருட்களின் விலை கடந்த சில நாட்களாகவே எந்தவித ஏற்ற, இறக்கம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை ஜிஎஸ்டி நடைமுறைக்குள் கொண்டு வர கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை மட்டும் மத்திய அரசால் ஏற்கப்பட்டால் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையில் கிட்டத்தட்ட 20 ரூபாய்க்கு மேல் மாற்றம் வர வாய்ப்பிருந்தது குறிப்பிடத் தகுந்தது. ஆனால், மத்திய அரசு எரிபொருட்களை இந்த நடைமுறைக்குள் கொண்டு வரும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக மறுத்து விட்டது.
இதில், தற்போது மாநிலம் முழுவதும் ஒரு லிட்டர் பெட்ரோல் 98 ரூபாய் 96 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 26 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 14 நாட்களாக இந்த விலை தொடர்ந்து வருகிறது. இதனை அடுத்து இந்த விலையில் எப்போது மாற்றம் வரும் என பொதுமக்கள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்