சன் டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் டெல்னா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் பிங்க் கலர் பட்டு புடவையில் புது தாலியுடன் அழகாக உள்ளார்.
வெள்ளித்திரையில் நடித்து அங்கு தனக்கென ஒரு அடையாளம் கிடைக்காகத்தால் சின்னத்திரைக்கு வந்தவர் டெல்னா. அதாவது விடியும் வரை பேசு என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் வந்தார். அதன் பின்னர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். எனினும் அவருக்கு வெள்ளித்திரையில் நிலைத்து நிற்க முடியவில்லை. அதன் பின்னர் அவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதாவது சூர்யா டிவியில் ஒரு சீரியலில் நடித்து தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் அன்பே வா என்ற சன் டிவி சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த சீரியலில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண், வசதி படைத்த வருண் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அதனால் அவர் தன்னுடைய மாமியார் மூலம் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்.
இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்த இவர், அவர்களுக்காக தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அதாவது அந்த புகைப்படங்களில் பஞ்சு மிட்டாய் கலரில் புடவையை அணிந்து கொண்டு கழுத்தில் புது தாலியுடன் புது பெண் போல தோற்றமளிக்கிறார். அவரின் இந்த புகைப்படம் எக்கசக்க லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்