தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் பாவாடை தாவணியில் கொள்ளை அழகில் ஜொலிக்கிறார்.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா. இவர் தனது வாழ்க்கையை ஒரு மாடலாக தொடங்கினார். மேலும் இவர் ஒரு நடன கலைஞனருமாவார். இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நடிக்கும் போதே பாயும் புலி,ஆச்சாரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். மேலும் இந்த மூன்று படங்களும் ஒரே ஆண்டில் வெளியாகியது.
எனினும் இவர் இந்த அளவிற்கு புகழ் அடைய காரணம் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க் நிமித்தமாக இவர் தாடி பாலாஜிக்கு எதிராக செய்த அனைத்தும் இன்றளவும் மறக்க முடியாத ஒன்று.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் அவரின் படங்களில் இவர் அடையாளம் காணப்பட்டார். அங்கு அவருக்கு கிடைத்த ரசிகர்கள் பட்டாளம் மூலமாக தான் இவர் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் சோசியல் மீடியாவில் மிக பிஸியாக இருந்த இவர் சமீப காலமாக தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடாமல் இருந்தார். தற்போது மீண்டும் தனது போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் பாவாடை தாவணியில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடிக்கும் வகையில் உள்ள புகைப்படத்தை இணையத்தில் உலவ விட்டு உள்ளார்.