தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு அதாவது செப்டம்பர் 18 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி இன்று (14, செப் 2021) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், நாளை (15, செப் 2021) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் திருப்பூர், தென்காசி மற்றும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (16, செப் 2021) முதல் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை நீலகிரி, கோயம்புத்தூர், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வரும் 16 ஆம் தேதி வரை ஒடிசா மற்றும் கடலோர ஆந்திர கடலோரப் பகுதி, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்