பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் தீபிகாவிற்கு பதிலாக சாய் காயத்ரி களமிறங்கியுள்ளார். மேலும் லட்சுமி இறந்ததை பார்த்து மூர்த்தி குடும்பமே கதிகலங்கி போயுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் லோடு ஏற்றுவதற்காக திருச்சி வரை தனியாக செல்ல தயாராகிறார். மேலும் ஐஸ்வர்யாவாக காயத்ரியை களமிறக்கியுள்ளனர். காலையில் குளித்து முடித்து கண்ணன் ரெடியாக இருக்க ஐஸ்வர்யா தானும் உடன் வருவதாக அடம் பிடிக்கிறார்.
சரி என்று ரோட்டில் கை கோர்த்து நடந்து செல்கின்றனர். கண்ணனை ஐஸ்வர்யா மாமா என்று அழைப்பது சற்று வித்தியாசமாக தான் உள்ளது. இந்த ஐஸ்வர்யா பழகுவதற்கு சில நாட்கள் ஆக தான் செய்யும். இந்த ஜோடி பிரபலமாகுமா?/ என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில் தான் கண்ணனின் போன் கடைக்குள் மாட்டிக்கொள்கிறது. இதனால் கண்ணனை இடையில் எப்படியும் அழைக்க முடியாது. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் முல்லை அனைவர்க்கும் காபி கொடுக்கிறார். கதிர் இதுவரையிலும் அம்மா தூங்கி கொண்டிருப்பதை பார்த்து எழுப்புகிறார்.
ஆனால் லட்சுமி எழுந்திருக்கவே இல்லை. இதனால் பயந்து போயி கதிர் கத்த மூர்த்தி, ஜீவா என குடும்பமே ஓடி வருகிறது.மூர்த்தி அழுதுகொண்டே அம்மாவை எழுப்புகிறார். ஆனால் லட்சுமி அசைவின்றி கிடக்கிறார். தனத்தின் அம்மா வந்து லக்ஷ்மியை தொட்டு பார்க்கிறார். அவர் இறந்து விட்டது அவருக்கு தெரிந்து விடுகிறது.
இதனை இந்த குடும்பம் தாங்குமா?? என்று அமைதியாக கண்கலங்குகிறார். ஜீவா அம்மாவை அழைத்து செல்ல வண்டியை கூப்பிட செல்கிறார். ஆனால் எந்த வண்டியும் கிடைக்கவில்லை. பொறுமையை இழந்த தனத்தின் அம்மா டாக்டரை அழைத்து வர சொல்கிறார்.
இதனால் அவரை குழப்பமாக பார்க்கின்றனர். ஜீவாவும் டாக்டரை அழைத்து வருகிறார். டாக்டர் வந்து லட்சுமி இறந்து விட்டதாக சொல்கிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் கதறுகிறது. ஆனால் தனத்தால் இதனை நம்ப முடியவில்லை. இதோடு எபிசோடு முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்