ரஜினி அவர்களின் சந்திரமுகி படத்தில் அத்திந்தோம் என தொடங்கும் பாடலில் பொம்மியாக வரும் சின்ன குழந்தையை நாம் யாரும் வாழ்வில் சீக்கிரம் மறந்திருக்க மாட்டோம். இந்நிலையில் அதில் பொம்மியாக நடித்த பிரக்ஷிதா பற்றிய ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரக்ஷிதா முதன் முதலாக அம்மன் வேடத்தில் நடித்து தனது திரை உலக வாழ்வை தொடங்கினார். முதலில் இவர் நடிப்பதில் விருப்பம் இல்லாத அவரின் அம்மாவுக்கு அதன் பின்னர் இயக்குனர்களின் சமாதானத்தின் பெயரில் கிருஷ்ண தாசி என்ற சீரியல் மூலம் ஒரு குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரைக்கு வந்தார். அதை தொடர்ந்து வேலன், செல்வி, ராஜ ராஜேஸ்வரி, அரசி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து உள்ளார்.
தனது 4 வயதிலேயே திரைக்கு வந்த இவருக்கு வெள்ளித்திரையில் ரஜினி அவர்களின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனினும் இந்த வாய்ப்பையும் அவரின் அம்மா ஏற்றுக்கொள்ளவில்லையாம். அதன் பின்னர் பி.வாசு அவர்களின் சமாதானத்திற்கு பிறகு அவரை நடிக்க வைக்க முடிவு செய்தார். அவரின் இந்த முடிவு மூலம் தற்போது பிரக்ஷிதாவின் சந்திரமுகி பொம்மி கதாபாத்திரம் அந்த அளவுக்கு பரிச்சியமாகி உள்ளது.
அந்த படத்தில் சிறு குழந்தையாக பார்த்த பொம்மி இன்று திருமணம் செய்யும் அளவுக்கு நன்கு வளர்ந்து விட்டார். மேலும் இவருக்கு தற்போது திருமணம் முடிந்து உள்ளது.இந்நிலையில் இவர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் சிலர் இந்த புதுமண ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்