தனக்கு தெரியாமல் பானிபூரி வாங்கி வந்த கணவரிடம் சண்டை போட்ட மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புனேயில் நடந்துள்ளது.
தற்கொலை முடிவு :
நாட்டில் பரவலாக விற்கப்படும் சாலையோர துரித உணவுகளில் பானிபூரியும் ஒன்று. உருளைக்கிழங்கு மசியலும், கொண்டக்கடலை மசாலாவுடன் சேர்த்து பூரிக்குள் வைத்து வழங்கப்படும் இதன் சிறந்த சுவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பது பலதரப்பட்ட மக்களின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில், சுவை மிகுதியாகவும், விலை குறைவாகவும் கிடைக்கும் துரித உணவுகளில் இந்த பானி பூரியும் ஒன்று.
இப்படிப்பட்ட பானி பூரியால் ஒரு குடும்பமே அழிந்துள்ள சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேயில் நடந்துள்ளது. தனது கணவருடன் இந்த பானிபூரி சம்பந்தமாக நடந்த சண்டையில் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த தற்கொலை குறித்து நகர காவல்துறை விரிவான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.
அதில் அவர்கள் தெரிவித்ததாவது, புனே நகரில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த இரு திருமண ஜோடிகளில், மனைவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமாக இருந்த அந்த பெண்ணின் கணவனை கைது செய்து விசாரித்த போது, தனது மனைவியிடம் நான் முன்பே தெரிவிக்காமல் பானிபூரி வாங்கி வந்தேன். இதற்காக, கோபம் கொண்ட அவள் இதை முன்பே தெரிவித்து இருந்தால் சமையல் செய்திருக்க மாட்டேன் என்று சொல்லி என்னிடம் சண்டை போட்டார். இதையடுத்து நடந்த வாக்குவாதத்தில், தனி அறைக்கு சென்று தன் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். பானிபூரியால் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்