உத்தர பிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் ரிவான் என்ற குழந்தையின் பெற்றோர் அவனுடைய முதல் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக அந்த பர்த்டே பார்ட்டியில் மிகப்பெரிய துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பர்த்டே பார்ட்டி ஆரம்பிக்கும் முன்னர் அச்சிறுவனின் அப்பா சத்யேந்திர கசனா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவர்கள் வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்துள்ளனர். மேலும் பிறந்தநாளை கொண்டாட சில விருந்தினர்களும் ரிவான்னின் பிறந்தநாள் கொண்டாடத்திற்காக வந்துள்ளனர்.
அப்போது ரிவான் 12 வது மாடியில் இருக்கும் பிளாட்டின் வெளியே உள்ள பொதுப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். ஆனால் எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்து அந்த இடத்திலேயே இறந்துள்ளான். இந்த செய்தி இணையத்தில் படுவேகமாக பரவி அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்