முன்னாள் டிஜிபி பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில் டிஜிபி மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை கூடுதல் எஸ்.பி. கோமதி தலைமையிலான போலீசார் நீதிபதி கோபிநாதன் முன் தாக்கல் செய்யப்பட்டது.
400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை…
கடந்த பிப்ரவரி மாதம் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உல்லாசமாக இருக்க அழைத்ததாக்க சிறப்பு டிஜிபி மீது புகார் அளித்தார். பின் அவரின் புகாரை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையை தொடங்கினர். இந்த பாலியல் வழக்கின் தொடர்பாக பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி மற்றும் பெண் எஸ்.பியை தடுத்த எஸ்.பி டிஜிபி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. அதன்பின் அந்த சிறப்பு டிஜிபி சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.
பின் இந்த வழக்கு சிபிசிஐடியிடம் விசாரிக்க உத்தரவிட்டு சிபிசிஐடி போலீசார் சம்மன் அளித்து தனித்தனியாக விசாரணையை நடத்த தொடங்கினர். அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இப்பொழுது 100க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கிற்கு சாட்சியாக சேர்த்துள்ளதாகவும், 400 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகை ஐ.ஜி., டி.ஐ.ஜி மற்றும் 2 எஸ்.பி.க்கள் மீதும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்