தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவை ஜிகா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. அம்மாநிலத்தில் முதலில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது. பின்னர் படிப்படியாக வைரஸ் பாதிப்பு கூடி வருகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் கேரள எல்லையில் பிடிக்கப்பட்ட கொசுக்களின் உடலில் ஜிகா வைரஸ் இல்லை என சுகாதாரத்துறையினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொதுவாகவே டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்களை பரப்பும் கொசுக்களாலேயே இந்த ஜிகா வைரசும் ஏற்படுகிறது. இது ஆபத்தான நோயாக தற்போது வரை கருதப்படவில்லை என்றாலும், இந்த வைரஸ் தொற்று மூன்று மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்டால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்ட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. சுகாதாரப் பணியாளர்கள்தான் இந்த ஜிகா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் பரவி வரும் ஜிகா வைரஸ் தமிழகத்திற்குள் ஊடுருவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழக எல்லையோர மாவட்டங்களான கோவை, தென்காசி, திருநெல்வேலி, தேனிஆகிய மாவட்டங்களில் பிடிக்கப்பட்ட 85 கொசுக்களுக்கு ஜிகா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த கொசுக்களின் உடலில் ஜிகா வைரஸ் இல்லை என்பது ஆய்வின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்