கடந்த சில நாட்களாக கிடுகிடுவென விலை ஏற்றத்தை சந்தித்து மக்களை அச்சுறுத்தி வந்தது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை. இந்நிலையில் இன்று அது மக்களுக்கு சிறிதளவு ஆறுதலை அளித்து உள்ளது. அதாவது சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றத்தை எதிர்கொள்ளாமல் நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.
தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனா போன்ற இயற்கை சீற்றங்களால் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்து பல மாதங்களாக தங்களின் இருப்பிடத்திலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம் அவர்களை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கிறது. எவ்வாறு என்றால் இந்த எரிபொருட்கள் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கான செலவு அதிகரிக்கிறது. இதை சமாளிக்க அவர்கள் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்தக் கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இதற்காக பல போராட்டங்கள் மற்றும் பல கோரிக்கைகள் எழுப்பியும் எந்த பயனுமில்லை.
மேலும் இதன் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே தினமும் மாற்றியமைக்கின்றன. அதன் படி சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் நேற்றைய விலையில் எந்த வித மாற்றத்தையும் சந்திக்கவில்லை. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.23க்கும் மற்றும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறையவில்லை என்றாலும் அதிகரிக்காமல் இருப்பது வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் மத்தியில் ஒரு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்