தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ், சமீபத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது, கத்தரிக்கோல் வர தாமதம் ஆனதால் கடுப்பாகி கையை வைத்தே ரிப்பனை கிழித்து உள்ளே சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கானாவில் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள மண்டேபள்ளி கிராமத்தில் நேற்று (ஜூலை 4,2021) நடைபெற்ற வீடு இல்லா ஏழை மக்களுக்காக அம்மாநில அரசு 80 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் தொடக்க விழாவில் முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் கலந்து கொண்டார்.
தொடக்க விழாவில் ரிப்பன் வெட்டும் நிகழ்வின் போது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கத்தரிக்கோலை முதல்வருக்கு உடனடியாக தாராமல் தாமதப்படுத்தியுள்ளனர். இதனால் கடுப்பாகிய தெலுங்கானா முதல்வர் கையை வைத்தே ரிப்பனை கிழித்து உள்ளே சென்றார். தற்போது இந்த வீடியோ ட்விட்டர், பேஸ்புக், யூடூயுப் என ட்ரெண்டாகி வருகிறது.
#WATCH | Telangana Chief Minister K Chandrashekar Rao pulls out ribbon after not getting a pair of scissors for cutting the ribbon, at an inauguration in Medipally of Thangallapally Mandal in Rajanna Sircilla district on Sunday. pic.twitter.com/0KjNCITgy3
— ANI (@ANI) July 5, 2021
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்