பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து 324 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் 2 கோடி கோவாக்சின் தடுப்பூசிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை தற்போது பிரேசில் நாட்டு அரசு ரத்து செய்ததுள்ளது.
பெருகி வரும் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது. கொரோனா இரண்டாம் அலையை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்ததில் தடுப்பூசியின் பங்கு இன்றியமையாதது. பல்வேறு உலக நாடுகளும் தடுப்பூசியை ஏற்றுமதி அல்லது வேறு தடுப்பூசியை இறக்குமதி செய்து வருகின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிற கோவாக்சின் தடுப்பூசியும் பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இவ்வாறு இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி, பங்களாதேஷ், மியான்மர், நேபால், பூட்டான், ஓமன், பிரேசில், மெக்ஸிகோ என பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சமீபத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் பிரேசில் அரசு 324 மில்லியன் டாலர் 2 கோடி கோவாக்சின் தடுப்பூசிகளை வாங்குவதற்காக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.
ஆனால் தற்போது அந்நாட்டில் தடுப்பூசி கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தலைமையிலான அந்நாட்டு அரசு தற்போது இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்