டெல்லி CAA போராட்டத்தில் கலவரம் – தலைமை காவலர் உட்பட 5 பேர் உயிரிழப்பு!!

0

டெல்லியின் வடகிழக்கு பகுதிகளான கோகுல்புரி, பஜன்புரா மற்றும் சில பகுதிகளில் நேற்று குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது அதற்கு ஆதரவாகவும் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட கலவரத்தால் 5 பேர் உயிரிழந்தனர்.

தீ வைப்பு..!

வன்முறை தீவிரமடைந்ததால் போராட்டக்காரர்கள் ஒருவருக்கு ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். மேலும் அந்த பகுதியில் இருந்த வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் டெல்லியே நேற்று புகை சூழ்ந்து இருட்டில் ஆழ்ந்தது. இந்த கலவரத்தில் தலைமை காவலர் ஒருவர் மற்றும் போராட்டக்காரர்கள் 3 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 105 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த சம்பவத்தால் டெல்லியின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here