ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை !!! – கடன் பிரச்சனை
உசிலம்பட்டி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆர்.கருப்பத்தேவர் தெருவை சேர்ந்தவர் சரவணன். சரவணனுக்கு வயது 38. இவர் நகைப்பட்டறையை சொந்தமாக வைத்துள்ளார். இவர் மனைவி பூங்கோதை (32), மகள்கள் மகாலெட்சுமி (11), அபிராமி (5), மகன் அமுதன் (5) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடன் பிரச்சனை இருந்ததுள்ளது.
தொடர்ந்து கடன் பிரச்சனையால் தவிர்த்து வந்த இவர்கள் மே 11 இன்று குடும்பத்துடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
கடன் பிரச்சனையால் ஒட்டு மொத்த குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.