கொரோனா தாக்கம் இன்னும் குறைந்தப்பாடு இல்லை, மக்கள் அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர். கொரோனாவிற்கு மருந்துகள் இல்லாத காரணத்தால் மக்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசிகள் போட்டு வருகின்றனர். இந்நிலையில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் தடுப்பூசிகளை தொடர்ச்சியாக வழங்கியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
37 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது…
கொரோனா தாக்கத்தால் மக்கள் அனைவரும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், அதுமட்டுமில்லாமல் கொரோனவை விரட்டியடிக்கவும் கொரோனா இல்லாத நாடாக மாற்ற அரசு பல வழிகளில் போராடிக்கொண்டு வருகிறது. இதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவ பொருட்கள், மருந்துகள், தடுப்பூசிகள் நம் நாட்டில் பற்றாகுறையாக இருந்தாலும் வெளி நாடுகளில் இருந்து தரமானவைகளை இறக்குமதி செய்து மக்களுக்கு வழங்கி வருகின்றது. இந்நிலையில் இதைபற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இதுவரை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் தடுப்பூசிகள் நிறுத்தாமல் தொடர்ச்சியாக எந்த குறையும் இல்லாமல் அளித்து வருகிறது. 37 கோடி தடுப்பூசி டோஸ்கள் இதுவரை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில் 1.06கோடி தடுப்பூசி டோஸ்கள் கையில் இருப்பாக வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் 23.5 லட்சம் அளவில் தடுப்பூசி டோஸ்களை மாநிலத்துக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்