தமிழக மக்களே.., பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.3,000 வழங்கப்படும்?? வெளியான அறிவிப்பு!!!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, வெல்லம் ஒரு கரும்பு ஆகியவற்றை பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இத்துடன் பணமும் வழங்கப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
அதாவது பொங்கல் பரிசு தொகுப்புடன் பணமும் வழங்கப்படும் என பொதுமக்கள் அனைவரும் ஆவலுடன் இருந்தனர். ஆனால் தமிழக அரசு அதற்கான அறிவிப்பை வெளியிடவில்லை. இது அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கும். எனவே இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி ரூ.3000 பொங்கல் பரிசுத் தொகையாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.