கொரோனா பரவலை தொடர்ந்து தற்போது கருப்பு பூஞ்சை நோய் தீவிரமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்ணுவர்தனுக்கு கருப்பு பூஞ்சைகளை கட்டுப்படுத்த 30ஆயிரம் மருந்து குப்பிகளை உடனே வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கருப்பு பூஞ்சை:
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் கோரத்தாண்டவத்தினால்பலர் தங்களது உயிரை இழந்து வருகின்றனர். இதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டு மக்களை மேலும் அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் மேலும் ஓர் கொடிய வகை கருப்பு பூஞ்சை என்னும் நோய் வேகமாக பரவி வருகிறது.
கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பிறகும் மூக்கடைப்பு மற்றும் காய்ச்சல் காணப்படும். முகம் வீங்கி முகத்தில் அதிகமான வலி காணப்படும். பார்வை குறைபாடு ஏற்படுவதோடு பார்வை தெளிவாக இல்லாமல் அனைத்தும் இரட்டையாக தெரிவதும் இதற்கான அறிகுறிகள் தான்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் மூக்கில் ரத்தம் கலந்த நீர் வருவது கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறியாக கருதப்படுகிறது. தற்போது கருப்பு புஞ்சை நோய் தீவிரமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தற்போது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்ணுவர்தனுக்கு கருப்பு பூஞ்சைகளை கட்டுப்படுத்த 30ஆயிரம் மருந்து குப்பிகளை உடனே வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.