கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கில் என்ன என்ன தளர்வுகள் அறிவிப்பது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு தொற்று பரவல் மெல்ல மெல்ல குறைய தொடங்கியது.எனவே அதில் சில தளர்வுகளை படிப்படியாக அறிவிக்க தமிழக அரசு ஆலோசனையில் ஈடுப்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.30 மணியளவில் தலைமைச் செயலாளர், சுகாதார செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருடன் ஊரடங்கில் என்ன என்ன தளர்வுகள் அறிவிப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.மேலும் மொத்தமாக தளர்வுகளை அமல் படுத்தினால் தொற்று வேகமெடுக்கும் என்பதை கருத்தில் கொண்டு ஓரளவு தளர்வுகளை அமல்படுத்தலாமா? என்று ஆலோசனை செய்ய உள்ளார். தற்போது தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வருகிற ஜூன் 7ம் தேதி வரை அமலில் உள்ளது.
இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள்,ஆம்புலன்ஸ் போன்றவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மருந்தகங்கள், பால் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் போன்றவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து கொரோனா குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கவும் கொரோனா அதிகம் உள்ள கோவை போன்ற மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாகவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த ஆலோசனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!