இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இரண்டு நாள் பயணமாக இந்திய வந்துள்ளார். இவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரை டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் 3000 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது அமல்படுத்தப்படவுள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இலங்கை தமிழர்கள் குடியுரிமை சட்டதிருத்தத்தில் இடம் பெறவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள மேலும் இலங்கைக்கு செல்ல விரும்பிய 3000 அகதிகளை அடையாளம் கொண்டுள்ளதாகவும் மேலும் அவர்கள் இன்னும் சிறிது மாதங்களில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.