தமிழகத்தின் முக்கிய மாவட்டமான சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், வேலூர், நீலகிரி, திருப்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை மையம் எச்சரித்த நிலையில் தற்போது புதிதாக ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதுமட்டுமின்றி கோவை, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காவிரி நீர் விவகாரம்: இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு., பரபரப்பான சூழலில் பெங்களூர்!!!