சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 24 ரூபாய் குறைந்து ரூ.4934க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த விலை இன்று சற்று குறைந்து உள்ளது பொதுமக்களை நிம்மதி அடைய வைத்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்:
உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தால் ஈடுசெய்ய முடியாத ஏகப்பட்ட இழப்புகள் ஏற்பட்டு உள்ளன. கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராத காரணத்தால் பொருளாதாரத்தை பழைய நிலைக்கு கொண்டு வர 10 ஆண்டுகள் கூட ஆகலாம் என வல்லுநர்கள் எச்சரித்து உள்ளனர். இதனால் ஏற்பட்ட பங்குச்சந்தை சரிவால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரித்தது. இதன் விளைவாக கிடுகிடுவென அதன் விலை உயரத் தொடங்கியது. மேலும் ஊரடங்கு நாட்களில் வியாபாரம் தடைபட்டாலும் தங்கத்தின் மதிப்பு ஒருபோதும் குறையவில்லை.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடக்கம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை ரூ.24 குறைந்து 4,934 ரூபாய்க்கும், ஒரு சவரன் ரூ.192 குறைந்து 39,472 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.70 ஆகவும், ஒரு கிலோ 70,000 ரூபாயாகவும் உள்ளது.