தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்து உள்ளது பொதுமக்களளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் கவலையில் உள்ளனர்.
இன்றைய விலை நிலவரம்:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்தே தங்கத்தின் விலை சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே வந்தது. கொரோனாவால் பல தொழில் துறைகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பி உள்ளனர். இதனால் அதன் மீது முதலீடு அதிகரித்து விலையும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. அதிலும் கடந்த 1 வாரத்தில் வரலாறு காணாத அளவிற்கு விலை ஏற்றம் ஏற்பட்டு உள்ளது. முதலீடுகள் அதிகரிப்பதால் மேலும் விலை அதிகரிக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசுப்பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள் – மாநில முதல்வர் அறிவிப்பு!!
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் (22 காரட்) தங்கத்தின் விலை 27 ரூபாய் அதிகரித்து ரூ.5,064க்கும், ஒரு சவரன் 216 ரூபாய் உயர்ந்து ரூ. 40,296 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விளையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி 71.30 ரூபாயாக உள்ளது.